இரவு வானில் நிகழப்போகும் அதிசயம்! வெற்றுக் கண்ணால் பார்க்க வாய்ப்பு
சூரிய மண்டலத்தில் உள்ள புதனைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களும் ஒரே கோட்டில் தெரியும் ஓர் அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி விஞ்ஞானி மற்றும் பொறியியலாளரான கிஹான் வீரசேகர, இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இரவு வானில் தோன்றும்..
சனி, வீனஸ், வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் வெறும் கண்களுக்கு தெரியும் என்றும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றை, அவற்றின் மங்கலான தன்மை காரணமாக தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரிய நிகழ்வு, குறைந்தது ஒரு மாதத்திற்கு இரவு வானத்தில் தெரியும் என்று வீரசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, பெப்ரவரி இறுதிக்குள், புதனும் வானில் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பெப்ரவரி 25 ஆம் திகதி, புதன் உட்பட சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் மாலை 7 மணிக்குப் பிறகு ஒரே கோட்டில் தென்படும் என்று விண்வெளி விஞ்ஞானி மற்றும் பொறியியலாளரான கிஹான் வீரசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.