பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை 30,000ஆக உயர்த்த திட்டம்
நாள் ஒன்றில் நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை 24,000ல் இருந்து 30,000 ஆக உயர்த்த சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சுகாதார சேவை அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாள் ஒன்றுக்கு 24,000க்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஆனால் நாட்டின் அதிகரித்து வரும் கோவிட் நிலைமையைச் சமாளிக்க அதனை சுமார் 30,000 ஆக உயர்த்த திட்டங்கள் உள்ளன.
இந்த நிலையில்
பி.சி.ஆர் சோதனை முடிந்ததும், முடிவுகள் வெளிவரும் வரை மக்கள் தனிமையில்
இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.