சிஐடி விசாரணையில் இருந்து திரும்பிய பிள்ளையான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் - 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக நேற்று மீண்டும் அழைக்கப்பட்டு பிள்ளையான் விசாரணைகளுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு தொடர்பான விசாரணைக்காக பிள்ளையான் இரண்டாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகினார்.
இந்நிலையில், குறித்த விசாரணைகளின் போது, ஏப்ரல் - 21 தாக்குதலில் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது ஒரு சித்தரிக்கப்பட்டுள்ள, புனையப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பதை உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
