நாங்கள் தடையாக இருக்க மாட்டோம்! பிள்ளையான் வழங்கிய உறுதி - செய்திகளின் தொகுப்பு
வடக்கின் தலைவர்கள் கிழக்கின் தனித்துவத்தையும் பாதுகாத்து உண்மையான இணக்கப்பாட்டோடு தெளிவான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைத்தால் அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
கிழக்கு மக்களையும் இணையாக நடத்தக்கூடிய திட்டத்துடன் தெளிவான அரசியல் தீர்வோடு பயணிப்பதற்கான திட்ட வரைபை அவர்கள் எமக்கு முன்வைத்தால் அவ்வாறான தீர்வு முயற்சிக்கு நாம் நிச்சயம் தடையாக இருக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் சிங்கள மக்களோடும் சிங்கள தலைவர்களோடும் பேச வேண்டுமெனக்கூறிக்கொண்டு கடந்த காலகசப்பான அனுபவங்கள் அதனூடான வெறுப்புக்களை வெளியிட்டு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan