பெண் விடுதலை இல்லாமல் மண் விடுதலை பெற முடியாது – பிள்ளையான்
பெண் விடுதலை இல்லாமல் மண் விடுதலை பெற முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிக் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(08.03.2025) அவரது கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் வாழ்கின்ற குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற பெண்களுக்கு, பெண்கள் மீது நம்பிக்கை இல்லையா என்கின்ற சந்தேகம் ஏற்படுத்தி இருக்கிறது.
காலதாமதம்
காரணம் தென்பகுதியில் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன. தென் பகுதியில் அதிகமான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விகிதாசாரத்திற்கு போகாமல் போனாலும் கூட, உள்வாங்கி இருக்கிறார்கள்.
இங்கு போலியாக தமிழ் தேசியம் பேசி சென்றவர்களும் உருவாக்கவும் இல்லை. அதற்கான அடித்தளம் இடவில்லை, இடப்போவதும் கிடையாது என்பதை மக்கள் அறிவார்கள்.
ஆனால், அந்த நிலைப்பாட்டை நாங்கள் செய்திருக்கின்றோம். யாப்பில் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கின்றோம். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் யாப்பில் கொண்டு வந்திருக்கின்றோம்.
பெண்களும் அதிகமாக இருக்கின்றார்கள். ஆனால் தலைமைத்துவத்திற்கு வருவதில்லை. இன்னமும் காலதாமதம் இருந்து கொண்டிருக்கின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |