பிலியந்தலையில் வாள்வெட்டுத் தாக்குதல்! துண்டிக்கப்பட்ட கை
கொழும்பின் புறநகா், மடபாத பொல்ஹேன பிரதேசத்தில், மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்தாா்.
முச்சக்கர வண்டியில் வந்த இருவா், பொல்ஹேன சந்திக்கு அருகில் வீதியோரம் நின்றிருந்த ஒருவா் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா்.
இதன்போது பாதிக்கப்பட்டவரின் வலது கை, மணிக்கட்டுக்கு அருகில் துண்டிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது இரண்டு கால்களிலும் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளன என்று பொலிஸார் தொிவித்துள்ளனா்.
பாதிக்கப்பட்டவா், 42 வயதுடைய நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.