கல்லாறு பாடசாலைக்கு புகைப்பட நகல் இயந்திரம் வழங்கி வைப்பு
கிளிநொச்சி - கல்லாறு பாடசாலைக்கு லண்டனில் உள்ள நோர்விச் தமிழ் பாடசாலையினால் 2,74,000 ரூபா பெறுமதியான புகைப்பட நகல் இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இயந்திரமானது, இன்றையதினம் (29.07.2024) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை செயற்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாக, குறித்த பாடசாலை சமூகத்தினால் ஈழவர் குழுமத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்வி நடவடிக்கைகள்
இந்த இயந்திரத்தினை நோர்விச் தமிழ் பாடசாலை சார்பாக சென்ற முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எனஸ்ரின் ஆகியோர் பாடசாலை சமூகத்திடம் கையளித்திருந்தனர்.
இந்த உதவி சுண்டிக்குளம் கல்லாறு வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கு மகத்தான பங்களிப்பாக இருக்கும் என பாடசாலை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |