ஆட்கடத்தலுக்கு எதிராக கையளிக்கப்பட்ட மனு
ஆள் கடத்தலுக்கு எதிரான நிலைப்பாடு 2024" என்ற திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்தோர் குரல் வலையமைப்பினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மனு கையளிக்கப்பட்டள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அபிவிருத்தி அதிகாரி மற்றும் மத்தியமாகாண புலம்பெயர்ந்தோர் வள மையத்தின் பணிப்பாளரிடம் குறித்த மனு கையளிக்கப்பட்டள்ளது.
ப்ரோடெக்ட் தொழிற்சங்கத்தின் ஹட்டன் கிளை தலைவி கருப்பையா மைதிலியின் குழுவினர் ஊடாக குறித்த மனு கையளிக்கப்பட்டது.
மலையகத்திலும் ஆட்கடத்தல்
இந்த மனுவில் மலையகத்திலும் ஆட்கடத்தல் இடம்பெறுவதாகவும் ஆட்கடத்தகாரர்கள் மீதும் ஆட்கடத்தல்காரர்களின் பொய்யான வாக்குறுதிகள் தொடர்பிலும் ஆரயப்படவேண்டுமெனவும் மக்களிடத்தில் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் கூறி குறித்த மனு கையளிக்கப்பட்டது.
இதன்போது ப்ரொடெக்ட் நிறுவன அமைப்பாளர்கள், நிருவாக குழு உறுப்பினர்கள் மற்றும் பிரிடோ நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் புலம்பெயர்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
|