சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் பேரூர் ஆதினம் அவர்களுடன் சந்திப்பு
சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் ஆகியன பேரூர் ஆதினம் முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களை சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்களின் இன்னல்களை விவரித்துள்ளதுடன்,சுமார் ஒரு மணிநேரம் குழுவினருடன் பேரூர் ஆதினம் விவாதித்துள்ளார்.
இது குறித்து சமதா கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் என்.ஏ. கோன் கூறியதாவது,
பேரூர் ஆதினம் அவர்கள், இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை துல்லியமாக புரிந்து வைத்துள்ளதுடன், எமது முயற்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இதன்போது கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் கடிதமும் கையளிக்கப்பட்டுள்ளது.