முள்ளிவாய்கால் நினைவேந்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பு - கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில், 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்குத் தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தி அதனைப் படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கல்குடா பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற அனுமதியினை பெற்று 3 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து இன்று (13) குறித்த வழக்கு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் 10 பேரின் சார்பில் சிரேஷட சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையில் கனகரத்தினம் சுகாஸ் ஆகியோர் ஆஜராகினர்.
இந்நிலையில் கோவிட் தொற்று காரணங்களால் நீதிமன்றத்துக்கு அழைத்துவர முடியாத நிலையில் அவர்களைத் தொடர்ந்தும் 27 திகதிவரை 14 நாட்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

ட்ரோன் தொழில்நுட்பத்தில் 2 பில்லியன் பவுண்டு முதலீடு - இராணுவத்தை சக்திவாய்ந்ததாக்க மாற்றும் பிரித்தானியா News Lankasri
