வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறி நடந்த நபருக்கு விளக்கமறியல்
திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்த நெதர்லாந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (17) உத்தரவிட்டார்.
முதலாம் இணைப்பு
திருக்கோவில் பகுதியில் சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(16.11.2025) மாலை மருதமுனைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் வசித்து வரும் திருமணமானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பெண் ஒருவரிடம் அக்டோபர் 25 ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்தபோது ஒரு இளைஞர் தகாத நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறி இலங்கை சுற்றுலா பொலிஸிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.

இந்த சம்பவத்தின் வீடியோவையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக சுற்றுலா பிரிவு பொலிஸார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பெண் அன்று அறுகம்பையிலிருந்து பாசிக்குடாவுக்குச் சென்றபோது திருக்கோவில் பகுதியில் குறித்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை(16.11.2025) மாலை மருதமுனைப் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.