யாழில் நீதிமன்றத்திற்குள் யுவதியிடம் தவறாக நடந்தவருக்கு நேர்ந்த கதி!
மல்லாகம் நீதிமன்றத்திற்குள் யுவதியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் ஒருவர் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாகம் நீதிமன்றத்தில் கடமை புரியும் 48 வயதுடைய, திருமணமாகாத குறித்த நபர், நீதிமன்றத்தில் வேலை செய்யும் 28 யுவதியிடம் தொடர்ச்சியாக தவறான நடத்தையில் ஈடுபட்டுள்ளார்.
முறைப்பாடு
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத குறித்த யுவதி இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை இன்றையதினம் விசாரணைகளுக்கு அழைத்த சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை
குற்றம் நிகழ்ந்த இடம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குள் உள்ளடங்குவதால் சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ Cineulagam