இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அழையுங்கள்! லண்டன் பொலிஸார் அவசர கோரிக்கை
வடக்கு லண்டனில் பெண் ஒருவரிடம் மோசமாக நடந்துகொண்டதாக கூறப்படும் நபர் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு லண்டனில் பேருந்தில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படும் நபர் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
அலெக்ஸாண்ட்ரா பார்க் சாலையில் ரூட் 102 பேருந்தின் மேல் தளத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் 30 வயதான பெண் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
செப்டம்பர் 13ம் திகதி மாலை 6 மணியளவில் நடந்த சம்பவத்தின் போது குறித்த நபர் தன்னை பேருந்தில் இருந்து வெளியேறுவதைத் தடுத்ததாகவும், தன்னைத் தகாத முறையில் தொட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
இந்நிலையில், “சிசிடிவி காணொளியில் இருக்கும் நபரின் பெயரை அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக பெருநகர காவல்துறையின் சாலைகள் மற்றும் போக்குவரத்து காவல் துறையின் பொலிஸ் கான்ஸ்டபிள் நிக் கோர்ட்ரைட் (Nick Kortrigh) தெரிவித்துள்ளார்.
"குறித்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைத்தால், உடன் தொடர்பு கொள்ளுமாறு” அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
படத்தில் உள்ள நபரின் பெயரைக் குறிப்பிடக்கூடிய எவரும் 101 ஐ அழைக்றுமாறும் அல்லது 7921/13SEP ஐ மேற்கோள் காட்டி @MetCC ஐ ட்வீட் செய்யுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri