ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்த நபர் கைது
கடந்த மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து ஜனாதிபதி அமரும் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த இளைஞர் ஒருவர் தெரணியகலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதான இந்த நபர் சமன்புரகம என்ற பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்
சந்தேக நபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை அலரி மாளிகைக்குள் புகுந்து மக்களை ஒன்று கூட்டிய சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேர் ஜா-எல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 மற்றும் 37 வயதான இந்த சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.