ரணிலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது
மட்டக்களப்பில் (Batticaloa) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில ரி 56 ரக துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை, இன்று (08.09.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் - கோரகளிமடு பிரதேசத்தில் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வருகை தருபவர்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு அனுப்பியுள்ளனர்.
சோதனை நடவடிக்கை
இதன்போது, கூட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரை சோதனையிடும் போது அவரின் உடமையில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை ஒன்றை கண்டுபிடித்து மீட்டதையடுத்தே அவரை கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர், வாகரை - வம்மிவெட்டுவான் வீதியை சேர்ந்த 24 வயதுடைய கடற்றொழிலில் ஈடுபட்டு வருபர் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டதால் ஏற்பட்ட அபாய நிலை! 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 15 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
