தொடருந்து பாதையில் பேருந்தை செலுத்தியவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு
அவிசாவளை (Avissawella) - புவக்பிட்டிய பகுதியில் போக்குவரத்திற்கு தடை ஏற்படும் வகையில் தொடருந்து பாதையில் பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதிக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தனியார் பேருந்து சாரதியை எதிர்வரும் ஜுலை 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் மூலம் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்கள்
இதன்போது, தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதி அங்கிருந்து வெளியேற முடியாமல் பேருந்து செலுத்துவதில் சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை மற்றைய வாகன சாரதிகள் காணொளியாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கமையவே, குறித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு பேருந்தும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam