தொடருந்து பாதையில் பேருந்தை செலுத்தியவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு
அவிசாவளை (Avissawella) - புவக்பிட்டிய பகுதியில் போக்குவரத்திற்கு தடை ஏற்படும் வகையில் தொடருந்து பாதையில் பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதிக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தனியார் பேருந்து சாரதியை எதிர்வரும் ஜுலை 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் மூலம் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்கள்
இதன்போது, தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதி அங்கிருந்து வெளியேற முடியாமல் பேருந்து செலுத்துவதில் சிரமப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை மற்றைய வாகன சாரதிகள் காணொளியாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கமையவே, குறித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு பேருந்தும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![நயன்தாராவை தொடர்ந்து 37 வயது தென்னிந்திய நடிகையுடன் இணையும் ஷாருக்கான்.. இயக்குனர் யார் தெரியுமா](https://cdn.ibcstack.com/article/717cbe9f-1106-4bfd-b453-a92fbb48fbca/24-6678df73b0fb0-sm.webp)
நயன்தாராவை தொடர்ந்து 37 வயது தென்னிந்திய நடிகையுடன் இணையும் ஷாருக்கான்.. இயக்குனர் யார் தெரியுமா Cineulagam
![25 வயதில் உலகப்புகழ் பெற்ற ஜாம்பவானின் மகள்... சாரா டெண்டுல்கரின் தனிப்பட்ட வருமானம் எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/016ded6b-e1e5-4ee4-9f92-9807c755b424/24-6679520461fbd-sm.webp)
25 வயதில் உலகப்புகழ் பெற்ற ஜாம்பவானின் மகள்... சாரா டெண்டுல்கரின் தனிப்பட்ட வருமானம் எவ்வளவு தெரியுமா? Manithan
![தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்கும் பெண்.., பிரம்மிக்க வைக்கும் ஒரு நாள் சம்பாத்தியம்](https://cdn.ibcstack.com/article/41282d83-30a8-48b9-8352-7d2aaf78f301/24-66793cfbb0d13-sm.webp)