யாழில் 300 லீட்டர் டீசலுடன் ஒருவர் கைது(Video)
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வைத்தியசாலை வீதி யாழ்ப்பாணத்தில் 300 லீட்டர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(07) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் டீசல் பதுக்கி வைத்திருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமையவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது
யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.