பறவைகளைக் கொலை செய்த நபர்கள் கொக்கட்டிச்சோலையில் கைது!
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளைக் கொலை செய்த நபர்கள் கொக்கட்டிசோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்கட்டிசோலை பொலிஸாரால் நேற்று (02.01.2025) சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் இடம் பெயர்ந்து வரும் வெளிநாட்டு அரிய வகை சுற்றுலா பறவைகள் இலங்கையின் பல்வேறு இடங்களில் தமது வாழ்க்கையை கழிப்பது வழக்கம்.
சட்டவிரோதமாக கொலை
இவ்வாறு இடம்பெயர்ந்து வரும் பறவைகளை சட்டவிரோதமாக கொலை செய்து வியாபாரப்படுத்தும் பல சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்கடிச்சோலை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பயணித்த வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றினுள் தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளும் கொலை செய்யப்பட்ட பறவைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டி சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தீர்வுத் திட்ட வரைவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களுடன் பேச முடிவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri