அடுத்த ஜனாதிபதியாக நாமல் வர வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச வர வேண்டுமென மக்கள் விரும்புகின்றார் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று கிராமங்களில் மட்டுமன்றில் சிறைகளிலும் நாமலே அடுத்த ஜனாதிபதி என பேசப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
76 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை விடவும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பார் என மக்கள் எதிர்பார்த்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டுக்காக கூடுதலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்சவை மக்கள் தோற்கடித்திருக்காவிட்டால் நாடு பாரியளவில் அபிவிருத்தியடைந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் மீண்டும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய தலைவர் நாமல் ராஜபக்ச மட்டுமேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam