வவுனியாவில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் (Video)
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களைச் சூழ அதிகளவு தூரம் வரை மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்ள மக்கள் வரிசை நீடித்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக இன்றும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அத்தோடு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் போது மிகக்குறைந்த அளவிலேயே எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வழங்கி வருவதாகவும், ஒரு நபருக்கு 500 ரூபாவிற்கு என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக எரிபொருளுக்காகக் காத்திருக்கும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.