இலங்கையில் உணவின்றி தவிக்கும் சுமார் 8.7 மில்லியன் மக்கள்
சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத்திட்டம் (WFP) ஆகியவை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு மதிப்பீட்டின் படி, இலங்கையில் சுமார் 8.7 மில்லியன் மக்கள் (39.1 சதவீதம்) போதுமான உணவை உட்கொள்வதில்லை என தெரியவந்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது இது ஒரு வியத்தகு சீரழிவை குறிக்கின்றது.
உலக உணவுத்திட்டம்
இந்த நிலையில் இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) நடத்திய ஒரு கணக்கெடுப்பில் 3.4 சதவீத குடும்பங்கள் மட்டுமே போதுமான உணவு உட்கொள்ளலைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2022, ஜூனில் உணவில் முக்கியமாக அரிசி, காய்கறிகள், எண்ணெய் மற்றும் சர்க்கரை இருந்தது.
எனினும் புரதத்தின் முக்கிய ஆதாரமான மீன் நுகர்வு சராசரியாக
வாரத்திற்கு 0.8 வீதமாக இருந்து என்று சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு
(FAO) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) என்பன கூறியுள்ளன.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
