மீரியபெத்த பகுதியிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கானோர்
கொஸ்லந்தை - மீரியபெத்த பகுதியிலிருந்து 248 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பரிந்துரைகளின் படி இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு
அந்தவகையில் 768 பேர் தமது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் கே.ஏ.ஜே.பிரியங்கிகா தெரிவித்துள்ளார்.

மீரியபெத்தையில் முன்னதாக மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த 144 குடும்பங்களும், மஹகந்த பகுதியைச் சேர்ந்த 23 குடும்பங்களும், திவுல்கஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 81 குடும்பங்களுமே இவ்வாறு நலன்புரி முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri