வடமராட்சி கிழக்கை கைவிட்ட மக்கள் பிரதிநிதிகள்:முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
வடமராட்சி கிழக்கில் இன்றையதின்(24) பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் வருகை தரவில்லை என மக்கள் தமது கவலையினை தெரிவித்துள்ளனர்.
அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மக்களுக்காக குரல் கொடுக்க ஒரு பிரதிநிதிகூட இல்லாமல் மக்கள் தமது விடயங்களை தாங்களாகவே முன்வைத்தனர்.
மக்கள் விசனம்
அதற்கு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் அவரே முடிவு எடுத்ததாகவும் சில முடிவுகள் மக்கள் நலன் சார்ந்தது அல்லதாகவும் இருந்தது என மக்கள் தமது விசனத்தை தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலங்களில் போட்டி போட்டு தினம் தினம் வரும் பிரதிநிதிகள் தமது வாக்கு வங்கிகளை நிரப்பி விட்டு மக்கள் பிரச்சினைகள், அபிவிருத்தி என வரும் போது கண்டும் காணாமலும் போவது ஏன் என மக்கள் தமது கவலையினை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
