பொதுஜன பெரமுன தலைமையில் ஆட்சி அமைந்தால் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடையும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆதிக்கம்கொள்ள கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வக்கட்சி அரசாங்கத்தின் ஸ்தாபிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது. சர்வக்கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்தால் அரசியல் நெருக்கடிக்குக்கு சற்று தீர்வு காண முடியும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவில்லாமல்,எந்த அரசாங்கத்தையும் ஸ்தாபிக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.
மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்

தான்தோன்றித்தனமான செயற்பாடுகள்,பேச்சுக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை குறுகிய காலத்திற்குள் பலவீனப்படுத்தியது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து ஸ்தாபிக்கப்படும் சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதிக்கம் கொள்ள கூடாது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல நிலைப்பாடு கிடையாது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள்.
தேர்தல் ஒன்றை நடத்த முடியாத நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது ஒரு அரசியல் கட்சி மாத்திரம் ஆதிக்கம் கொள்ளும் போது சர்வக்கட்சி அரசாங்கத்தின் நோக்கம் முரண்பட்டதாக அமையும்.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தீர்க்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கை 30ஆக வரையறுக்கப்பட வேண்டும்,அரச செலவுகள் இயலுமான அளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam