திருகோணமலையில் மதுபானசாலை திறப்புக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலக பகுதியில் உள்ள இருதயபுர கிராமத்தில் மதுபானசாலை திறப்புக்கு எதிரான மக்கள் போராட்டம் இடம் பெற்று இருந்த போதிலும் மக்கள் எதிர்ப்பினால் தற்காலிகமாக மூடப்பட்டு மீண்டும் அதனை திறந்ததனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருதயபுர கிராமத்தில் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் இந்த மதுபானசாலை அமையப் பெற்றுள்ளதுடன் இதனை அண்டி கிறிஸ்தவ தேவாலயமும் காணப்படுகிறது.
அரசாங்கத்தின் அனுமதியால் மதுபானசாலை திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகின்ற போதும் இங்கு பல மக்கள் கூடி சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதி அதிகாரம்
குறித்த போராட்டமானது கடந்த மாதம் 25ஆம் திகதி பெரும் மக்கள் போராட்டமாக மாறி களவறமாக அமையப் பெற்று இதில் பல்வேறு குற்றசாட்டுக்களை முன்வைத்து மூதூர் பொலிஸாரால் ஆண்கள், பெண்கள் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
மாணவ சமூகத்தை பாதுகாக்கவும் இளைஞர் சமூகத்தை பாதுகாக்கவும் மக்கள் மது பானசாலையை எதிர்க்கிறார்கள் .மதுபானசாலைக்கான அனுமதியை வழங்கியது யார் ? பெரும் பணம் படைத்தவர்கள் இதற்கான அனுமதியை அதிகாரத்தை வைத்து எடுத்திருப்பார்கள் என்ற நிலையில் அதிகாரம் தலைவிரித்தாடுகிறது.
குடி குடியை கெடுக்கும் என்பார்கள் மது பாவனை உடல் நலத்துக்கு கேடு என சொல்வார்கள் இப்படியான பல விடயங்களை வைத்து இருதயபுர கிராம மக்கள் போராட்டத்தில் குதித்த போதும் அடாவடித்தனமாக சட்டத்தை வைத்து அப்பாவி மக்களை கைது செய்துள்ளார்கள்.
அனுமதிப் பத்திரம்
இச் சம்பவம் தொடர்பான களநிலவரங்களை அறிய திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் களவிஜயம் செய்து மக்களை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடினார்.
குறித்த கவனயீர்ப்பில் மூதூர் பொலிஸாரினால் அன்றைய தினம் (25)கைதான 15 நபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்கள்.
இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன், கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மக்களுக்கான முன்னுரிமைகளை அரசாங்கம் வழங்கி குறித்த மதுபானசாலையை மூட வேண்டும் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக உள்ளது.
ஆனாலும் போராட்டத்தின் போது 15 நபர்களை கைது செய்துள்ளார்கள் இந்த கைது தொடர்பில் இதன் எதிர்ப்புக்கள் பற்றியும் நாடாளுமன்றிலும் வெளியிலும் மக்கள் பிரதிநிதிகளால் பேசப்பட்டாலும் அது வெற்றியடையவில்லை.
அதிகார துஷ்பிரயோகம்
அதிகார துஷ்பிரயோகம் மூலமாக எதையும் செய்யலாம் சாதிக்கலாம் என்ற மன நிலை காணப்படுகிறது. அனுமதியின்றி ஒன்று கூடியமை, பொலிஸாரை தாக்கியமை, அமைதியின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச் சாட்டுக்களை முன்வைத்து 15 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இக் குறித்த போராட்டத்தில் பொலிஸார் ஒருவர் உட்பட சாதாரண பெண்ணும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மது பாவனை மூலமாக குடும்ப வன்முறை உள்ளிட்ட பல பாதக விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது இதனை பொருட்படுத்தாது சமுதாயத்தை அழிக்கும் செயலாகவும் காணப்படுகிறது. இந்நிலையில் மதுபானசாலையை நிறந்தரமாக மூடுமாறும் மக்கள் கோரிக்கையாக உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |