மட்டக்களப்பில் பழுதடைந்துள்ள தபால் அலுவலக கட்டடத்தை புனரமைப்புக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை
மட்டக்களப்பில் நீண்ட காலமாக பழுதடைந்து காணப்படும் களுவாஞ்சிகுடி தபால் அலுவலக கட்டடத்தை புனரமைப்பு செய்யுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்த கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் உறுதியளித்துள்ளார்.
குறித்த தபால் காரியாலயம் கடந்த யுத்த காலத்திலிருந்து முற்றாகப் பாதிப்புற்ற நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றது.
இதன் காரணமாக களுவாஞ்சிகுடி தபாலக நடவடிக்கைகள் வாடகை கட்டடத்திலேயே தற்போது வரைக்கும் இயங்கி வருகின்றன.

அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் மோடி : திராவிட முன்னேற்றக்கழக பொருளாளர் குற்றச்சாட்டு
புனரமைப்பு நடவடிக்கை
இந்நிலையில், இது குறித்து அப்பகுதி மக்கள் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதற்கமைய, அமைச்சரின் பணிப்புரைக்கமைய அவரின் பிரதிநிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் குறித்த தபால் காரியாலயத்தை வியாழக்கிழமை (29.02.202) நேரில் சென்று நிலமையை அவதானித்துள்ளார்.
இதன்போது, புனரமைப்பு செய்வதற்குரிய பூர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி News Lankasri
