கொழும்பில் மீன்களை நிராகரிக்கும் மக்கள் - விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தினால் மக்கள் மீன்கள் கொள்வனவு செய்வதனை தவிர்த்து வருகின்றனர்.
கப்பலில் தீப்பற்றியமையினால் அதிலிருந்த இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் கடல் நீரில் கலந்திருக்கலாம் என்ற அச்சம் காரணமாகவே மக்கள் மீன் கொள்வனவு செய்வதில்லை என மீன் மீன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் பல பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இன்றைய தினமும் திறந்து வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட காலங்களின் பின்னர் நேற்றைய தினமே மிக அதிகமான அளவு மீன் பிடிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட மீன் சந்தையில் அதிகளவு மீன் தேங்கி இருப்பதாகவும் கடந்த காலங்களில் அதிக விலையில் இருந்த மீன்களின் விலை பாரிய அளவு குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.