அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது
அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு குரல் கொடுக்கத் தவறினால் தற்போதைய மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நாடு என்று ஒன்று எஞ்சியிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியில் இருப்பவர்கள் கடந்த காலம் முதலே ஏனையர்கள் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதியளவு சாட்சியங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாக சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam