கஸக்ஸ்தானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது 164 பேர் பலி (VIDEO)
கஸக்ஸ்தானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தபட்சம் 164 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து கடந்த 2 ஆம் திகதி முதல் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
இதன்போது ஏற்பட்ட வன்முறைகளில் அரச படையினர் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சுமார் 6000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கஸக்ஸ்தான் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,