மண் எண்ணெய் அடுப்புகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டும் மக்கள்
மண் எண்ணெய் அடுப்புகளை கொள்வனவு செய்வதற்காக கொழும்பு நகரில் வாழ்ந்து வரும் மக்கள், கொழும்பு புறக்கோட்டை ஐந்து லாம்புச் சந்தி பகுதியில் உள்ள கடைகளில் அலைமோதியுள்ளனர்.
சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் லாஃப் மற்றும் லிட்ரோ ஆகிய நிறுவனங்கள் கடந்த 10 ஆம் திகதி எரிவாயுவின் விலைகளை அதிகரித்ததால், மக்கள் மண் எண்ணெய் அடுப்புகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மக்கள் மண் எண்ணெய் அடுப்புகளை கொள்வனவு செய்து வருவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வர்த்தகர் ஒருவர், ஏனைய நாட்களை விட இன்றைய தினம் 50க்கும் மேற்பட்ட மண் எண்ணெய் அடுப்புகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.