முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு முன்பாக பாதசாரிக்கடவை, வீதிசமிக்ஞை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை
முல்லைத்தீவில் அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு முன்பாக பாதசாரிகள் கடவை, வீதி சமிக்ஞை இல்லாததனால் வீதியினை கடந்து செல்வதற்கு மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
முல்லைத்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட நீதிமன்றம் A31 பிரதான வீதியில் இருப்பதனால் நீதிமன்றத்திற்கு முன்பாக அதிகமான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதனால் நீதிமன்றத்திற்கு தேவையின் நிமிர்த்தம் வரும் பொதுமக்கள் போக்குவரத்து கடவை இல்லாததனால் வீதியினை கடப்பதற்கு பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளாகியுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு முன்பாக வீதி சமிக்ஞை இல்லாததனாலும் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் நீதிமன்றம் இருப்பதனை கவனிக்காமல் ஒலி எழுப்பி நீதிமன்ற செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
குறித்த பகுதியில் பாதசாரிகள் கடவை, வீதி சமிக்ஞை இல்லாததனால் விபத்துக்கள் ஏற்பட கூடிய அதிக வாய்ப்புக்கள் இருப்பதனால் நீதிமன்றத்திற்கு முன்பாக வீதி சமிக்ஞை, பாதசாரிக்கடவையை உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து அதனை அமைத்து தருமாறும் நீதிமன்றிற்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam