கனடாவில் வேலை வாய்ப்பு! மக்களை ஏமாற்றிய நபர் சிக்கினார்
கனடாவில் வேலை மற்றும் வதிவிட விசா தருவதாக கூறி மக்களை ஏமாற்றிய நபர் ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் மக்களை ஏமாற்றி 5 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை பணம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் சந்தேகநபரை இன்று (02.03.2023) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைத்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
கனேடிய தொழில் வாய்ப்பு
சந்தேகநபரின் மோசடியில் சிக்கிய 25 பேரிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கனேடிய தொழில் ஆட்கடத்தலுக்கு உதவிய எம்பிலிப்பிட்டிய உள்ளுராட்சி சபையில் பணிபுரியும் அரச அதிகாரி ஒருவரையும் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சந்தேகநபர்கள் இருவரும் கடுவெல நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு மார்ச் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
