அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் காத்திருக்கின்றனர் - ஹர்ச டி சில்வா
நாட்டின் தற்போதைய அரசாங்கம் மக்களை ஏமாற்றி இன்னும் 5 வருடங்கள் ஆட்சியில் இருக்க முயற்சிக்குமாயின் அது எந்த வகையிலும் நடக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரத்தில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப விரல்களை எண்ணிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹோமாகமை பிரதேசத்தில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த மேலும் 5 ஆண்டு காலம் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் ஹர்ச டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.