உடன்பாடு எட்டப்படாவிட்டால்..! அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கத் தயார்
அமெரிக்காவும் ஈரானும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் இன்று(30) தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் முக்கிய பாதுகாப்பு மாநாடான Shangri-La Dialogue நிகழ்வில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேவைப்பட்டால் மீண்டும் நடவடிக்கைகளைத் தொடங்கும் திறன் எங்களிடம் உள்ளது.
ஈரானுடனான மோதல்
அதற்கான முழுத் திறனும் எங்களிடம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் எங்களிடம் உள்ள கையிருப்புகள் அதற்குப் போதுமான அளவுக்கும் மேலாக உள்ளன, எனவே நாங்கள் மிகவும் சாதகமான நிலையில் இருக்கிறோம். ஈரானுடனான மோதலில் ஈடுபட்டிருந்தாலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா விலகவில்லை என்று வலியுறுத்தினார்.

ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களைச் செய்யும் திறன் எங்களுக்கு உள்ளது. எங்களுடைய பாதுகாப்புத் தொழில்துறை உற்பத்தித் திறனை பல மடங்கு அதிகரித்து வருகிறோம். மிக விரைவில் ஆயுத உற்பத்தி இரண்டு, மூன்று, நான்கு மடங்காக உயரும்.
இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள எங்களுடைய நடவடிக்கைத் திட்டங்களுக்கு தேவையான ஆதாரங்கள் உறுதி செய்யப்படும், என்றார்.
ஈரான் போருக்கு முற்றுப்புள்ளி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுமையுடன் செயல்பட்டு வருவதாகவும், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறாத வகையில் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் ஹெக்செத் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை ட்ரம்ப், ஈரான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன்மொழிவை குறித்து இறுதி முடிவெடுக்க வெள்ளை மாளிகை பாதுகாப்பு அறையில் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறினார்.
அந்த முன்மொழிவு, ஏப்ரல் தொடக்கத்தில் ஏற்பட்ட போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து, நிரந்தர உடன்பாட்டை உருவாக்க பேச்சுவார்த்தையாளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri