புத்தாண்டு காலத்தில் பேலியகொடை மீன் சந்தை திறந்திருக்கும்! விலை மாற்றம் குறித்தும் தகவல்
பேலியகொடை மீன் சந்தை(Peliyagoda Fish Market) எதிர்வரும் 13,14 மற்றும் 15ஆம் திகதிகளில் திறக்கப்பட்டிருக்கும் என பேலியகொடை மீன் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை போதியளவு மீன் கையிருப்பு உள்ளதாகவும், விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்களின் நலன்
மேலும் புத்தாண்டின்(Newyear) போது மக்களின் நலன் கருதி பேலியகொடை மீன் சந்தை இவ்வாறு திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு சில தினங்களுக்கு முன் குறைந்திருந்த மீன் விலை ஓரளவு அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.