டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை செய்த பஞ்சாப் அணி
டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப் பெரிய வெற்றி இலக்கை அடைந்து மாபெரும் வெற்றியை பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவு செய்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (kkr) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (pbks) ஆகிய அணிகளுக்கிடையாலான 42 போட்டி நடைபெற்றது.
இதன்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பாட்டம் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 261 ஓட்டங்கள் குவித்தது.
இதனையடுத்து 262 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி அதிரடி ஆட்டத்தை காட்டியது.
பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் கடந்து 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து துடுப்பாட்டம் செய்த ஷஷான்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு மேலும் வலு சேர்த்தார்.
இறுதியில் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப் பெரிய வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவு செய்துள்ளது.
இது மட்டுமன்றி டி20 வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ஆறு ஓட்டங்கள் பதிவாகிய போட்டியாகவும் இது மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
