மக்கள் வங்கிக்கு எந்த உரிமையும் இல்லை! பணத்தை உடனடியாக செலுத்துங்கள்: சீன நிறுவனம் அதிரடி
தமது நிறுவனத்திற்கு கிடைத்த விற்பனை ஆணைக்கு அமைவான சேதனப் பசளை தொகைக்கு இலங்கை மக்கள் வங்கி வெளியிட்ட கடன் பத்திரத்திற்கான பணத்தை செலுத்தி விட்டதாக சீனாவின் Qingdao Seawin Biotech Group Company Ltd நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், இலங்கை மக்கள் வங்கி புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்த முடியாது என சீன நிறுவனத்தின் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
தமது நிறுவனம் சீனாவின் பிரதான பசளை நிறுவனத்தின் விலை மனு நடைமுறைகளுக்கு அமைய பசளை தொகையை பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசளையின் தரம் சம்பந்தமாக பிரச்சினை இருந்தால், இரண்டு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய ஏற்படும் சிக்கலை அதன் ஷரத்திற்கு அமைய நட்பான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
எனினும் இதனை அடிப்படையாக கொண்டு பணம் செலுத்துவதை இடைநிறுத்த மக்கள் வங்கிக்கு எந்த உரிமையுமில்லை எனவும் பசளைக்கான பணத்தை மக்கள் வங்கி உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் Qingdao Seawin Biotech Group Company Ltd குறிப்பிட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri
