மருத்துவமனை நடைபாதையில் தங்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகள்!சுகாதார அமைச்சகம் மறுப்பு
மருத்துவமனை நடைபாதையில் தங்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையங்களில் பதிவிடப்பட்டது போன்று சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அவசரகால சூழ்நிலைகளில் செயல்படுமாறு அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த படங்களில் உள்ளவர்கள் அனைவரும் கோவிட் நோயாளிகளா? என்று சொல்வது கடினம். பொதுவாக,கோவிட் நோயாளிகள் மூடப்பட்ட அறைகளில் வைக்கப்படுவார்கள், அங்கு வெளியாட்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
இதேவேளை, கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பல மருத்துவமனைகளில் உள்ள சிகிச்சை அறைகள் நிரம்பியுள்ளன.
இருப்பினும், எல்லா மருத்துவமனைகளிலும் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது செயல்பட ஒரு அமைப்பு உள்ளது.
தம்மை பொறுத்தவரையில், மருத்துவமனைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளிகளுக்கு இடமளிக்கவும், அவர்கள் நன்றாக சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam