சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை செப்டெம்பர் 21 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மனு தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பான மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
