இலங்கைக்கு மிகவும் நெருக்கமான பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி மரணம்
நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனது 79 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று (05.02.2023) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
1943 இல் டெல்லியில் பிறந்த பர்வேஸ் முஷாரப், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது முஷாரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
1964 இல் பாகிஸ்தான் இராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியாகி, 1999 இல் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றினார் .
2008 ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகி துபாயில் வசித்து குறிப்பிடத்தக்கது.
காலமான முஷாரப் இலங்கையுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பேணிய பாகிஸ்தான் ஜனாதிபதியாகும். குறிப்பாக ராஜபக்ஷர்களுடன் சுமுகமாக உறவுகளை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.