உள்ளூராட்சி அமைப்புக்குள் கட்சி மாறுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
உள்ளூராட்சி அமைப்புக்குள் கட்சி மாறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கட்சி மாறுபவர்கள் அல்லது உள்ளூராட்சி அமைப்புகளுக்குள் கட்சி ஒழுக்கத்தை மீறுபவர்கள் குறித்து தேர்தல் ஆணையகத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
சட்டத்தில் அதற்கான இடமில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் ஒழுக்கத்தை மீறும் சம்பவங்கள்
கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் குறித்த பொது ஆலோசனை நிகழ்ச்சிக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாட்டின் பல இடங்களிலும் இதுபோன்ற கட்சி மாறும் மற்றும் கட்சியின் ஒழுக்கத்தை மீறும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறித்தே, ஆணையாளர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |