ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல்! விசாரணை அறிக்கை நாளை நாடாளுமன்றில்!
நாடாளுமன்றத்துக்குள் நேற்று ஆளும் கட்சியினரால், ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பில், நாளை முழுமை விசாரணை அறிக்கை வழங்கப்படும் என்று சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
அரசாங்கக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை காணொளிப்படுத்தினர் என்ற குற்றச்சாடு சுமத்தப்பட்டே குறித்த இரண்டு ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை விடுத்த சபாநாயகர், சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருவதாகவும் முழுமை அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.