ரணில் விக்ரமசிங்க வானிலை மைய அறிவிப்பாளராக செயற்படுகிறார்! விமல் வீரவன்ச
கேள்விப்பத்திரம் அவசியம்
கேள்விப் பத்திரங்கள் இன்றி புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி திட்டங்களை முன்னெடுக்கவேண்டாம் என்று தேசிய மக்கள் சக்தியும் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
கேள்விப்பத்திரம் இன்றி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், கொள்ளைகளுக்கு வழிவகுக்கும் செயற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
10 மெகோவோட்ஸூக்கு குறைந்த திட்டத்துக்கு கேள்விப்பத்திரம் இல்லாமலும், அதற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு கேள்விப்பத்திரங்களை அழைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ரணில், வானிலை அறிவிப்பாளர்
இதேவேளை இதே கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் தெரிவித்துள்ளார்.
சர்வக்கட்சி அடிப்படையில் செயற்படுவதாக கூறும் அரசாங்கம் ஏன் இந்த விடயத்தை பலரும் கூறுகின்றபோது அதற்கு உடன்பட மறுக்கிறது என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றுக்கு வந்து சில அறிவித்தல்களை விடுப்பதாக குறிப்பிட்ட விமல் வீரவன்ச, அவர் கால நிிலை அவதான நிலைய அறிவிப்பாளர் போன்று நடந்துக்கொள்வதாக தெரிவித்தார்.