கிளிநொச்சி மைதானத்தை பிரதேசசபையிடம் ஒப்படைக்குமாறு நாடாளுமன்றில் கோரிக்கை!
கிளிநொச்சி மைதானம்
கிளிநொச்சி பொது மைதானத்தை விளையாட்டு அமைச்சின் பொறுப்பில் இருந்து கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் இந்தக் கோரிக்கையை இன்று நாடாளுமன்றில் விடுத்தார்.
குறித்த பிரதேசசபைக்கு கிளிநொச்சி மைதானத்தை பராமரிக்க முடியும் என்றும், இதற்கு அப்பால் வெளிநாடுகளில் உள்ள கிளிநொச்சி மக்களிடம் இருந்து உதவியை பெற்று மைதானத்தை பராமரிக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மைதானத்தை புனரமைக்கும் பணிகள், 12ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் குறித்த மைதானத்தை விரைவில் புனரைமைத்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரதேசசபை ஒன்றுக்கு இந்த விளையாட்டு மைதானத்தை பராமரிக்க முடியாது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.