உயிருக்கு உத்தரவாதம் இன்றி செயலாற்றும் ஊடகவியலாளர் அரசாங்கத்தினால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் - செல்வம் அடைக்கலநாதன்
இலங்கையின் ஊடகவியலாளர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் செயலாற்றி வருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எனவே ஊடகவியலாளர்கள் உரிய முறையில் கவனிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே போர்க் காலத்தின்போது கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் ஊடகவியலாளர்கள் பல்வேறு தடைகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் நாடாளுமன்றம் உறுப்பினர் குறிப்பிட்டார்.