”பைத்தியகாரர்” என்ற விமா்சனத்தை ஏற்கும் அளவுக்கு ”கோட்டாபயவின் ஆட்சியில் ஜனநாயகம்” - அரசாங்கம்
”பைத்தியக்காரர்” என்று சொல்லும் அளவுக்கு கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் ஜனநாயகம் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
”பைத்தியகாரர்” என்ற சொல்வதை அரசாங்கம் பிரச்சனையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அரசாங்க கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதுதான் ஒன்றரை வருடங்கள் கழிந்த நிலையில் ஜனாதிபதியின் பெயர் நந்தசேன என்பது பலருக்கு நினைவுக்கு வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சி இன்று சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை தேர்தலின்போது ”தாம் அரச வாகனங்களை பெற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கூறிய எதிர்கட்சி தலைவர், இன்று அரச வாகனத்தையே பயன்படுத்துவதாக ஜோன்ஸ்டன் பொ்ணான்டோ குறிப்பிட்டார்.
ஓவராக பேசிய அறிவுக்கரசி, தூக்கிபோட்டு மிதித்து சம்பவம் செய்த ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தரமான புரொமோ Cineulagam
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri