இலங்கைக்கு பெருமளவு "கறுப்பு டொலர்கள்" கொண்டு வரப்படவுள்ளன- நாடாளுமன்றில் தகவல்
2022ஆம் ஆண்டு உள்ளுாராட்சி சபைகளின் தேர்தல்களை அரசாங்கம் நடத்திக்காட்டட்டும் என்று எதிர்கட்சி சவால் விடுத்துள்ளது.
எதிா்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம் மரிக்கார் இந்த சவாலை விடுத்துள்ளார்.
எனினும் தற்போதைய நிலைமையில் அரசாங்கம், தேர்தலை நடத்தப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் அடுத்த வாரத்தில் கறுப்பு டொலர்களை வெள்ளை டொலர்களாக மாற்றும் செயற்பாடு இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் டொலருக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காகவே ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நனோ நைட்ரிஜன் கொள்வனவின் மூலம் 800 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது
இந்த நட்டம், நாட்டின் வரி செலுத்துவோரின் பணமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.