ரஞ்சன் ராமநாயக்கவுக்கு “ஜனாதிபதி பொதுமன்னிப்பு” தொடர்பில் நீதியமைச்சரின் பதில்
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியே முடிவெடுக்கவேண்டும் என்று நீதிமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் நிதியொதுக்கீட்டின் விவாத்தின் பதிலளித்து உரையாற்றிய அவர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை மற்றும் விசாரணை செய்யப்பட்டமை அனைத்தும் நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே இடம்பெற்றன.
எனவே அதில் எவ்வித தொடர்பும் நடப்பு அரசாங்கத்துக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அவருக்கு பொதுமன்னிப்பை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்று அலி சாப்ரி தெரிவித்தார்.