பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடயத்தில் மாற்றம் வரும்- அமைச்சர் சாப்ரி உறுதி
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை வெளியில் அழைத்துச்செல்லப்படுகின்றபோதும் உள்ளே அழைத்து வருகின்றபோதும் விசேட அதிரடிப்படையினரால் சோதனையிடப்படும் முறை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் இன்று அதிருப்தியை வெளியிட்டார்.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் அலி சாப்ரி, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
எனவே இந்த விடயத்தில் பொிய மாற்றங்கள் வரும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.