நாடாளுமன்றில் ஒரு வருடமாக பதிலின்றி தொடரும் மட்டக்களப்பின் கேள்வி
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இந்தநிலையில் புவிச்சரிதவியல் திணைக்களத்தின் முகாமையாளர் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்தும் பணியாற்றி வருவது குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இந்த கேள்வியை எழுப்பினார்
கடந்த வருடம் பாதீட்டு உரையின்போது இந்த கேள்வி எழுப்பியபோது, ஆராய்வதாக அமைச்சர் உறுதியளித்திருந்தபோதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கருணாகரம் சுட்டிக்காட்டினார்
இதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.